வெள்ளச்சிப்பாட்டி இன்னும் உயிரோடு இருக்கிறது என்ற செய்தியே எனக்கு அதிசயமாகப் பட்டது.
இருபது வருடத்திற்கு முன் நான் பார்க்கும் போதே வாயெல்லாம் பொக்கையாகி தோல்சுருங்கி எலும்பு வளைந்து தட்டுத் தடுமாறி நடமாடிய பாட்டி எப்போதோ சிவலோகத்திற்கோ வைகுண்டத்திற்கோ போயிருக்கும் என்று நினைத்திருந்தேன்